National Party

தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற்ற  கெஜ்ரிவால் ஆட்சிக்கு கிடைக்கவிருக்கும் சலுகைகள் என்ன?  என பார்க்கலாம் 

கெஜ்ரிவால், கோரக்பூர் ஐ.ஐ.டியில் இயந்திரவியல் பட்டதாரி, டெல்லியில் வருமானவரி அலுவலகத்தில் பணியாற்றிய போதே, ஊழலுக்கு எதிராக போராடியவர்.

ஊழலுக்கு எதிராக போராட்டம், விழிப்புணர்வு,  என தனது பாதையை வகித்தவர்.  2011ல் அண்ணா ஹசாரே வின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர். அந்த போராட்டத்தில் மக்கள் கவனத்தை பெற்றவர். 

2012ல் ஆம் ஆத்மி  என்ற கட்சியை தொடங்கினார். அப்போது அளவற்ற ஏளனத்திற்கு உள்ளானார். ஆனால் அவமானங்களை எல்லாம் அடி உரம்க்கி 2013 டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 23 இடங்களை பிடித்தார்.

அதே மக்கள் ஆதரவுடன் அங்கு 2015 யில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் அரியணை ஏறிய ஆம் ஆத்மி, 2020 தேர்தலிலும் அமோக வெற்றியை பெற்றது.

2022 பிப்ரவரியில் பஞ்சாப் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 2020 மார்ச் மாதம் கோவா தேர்தலில் 6.77 சதவீத வாக்கை பெற்றவுடன் இரண்டு இடங்களில் வென்றது. அதனைத் தொடர்ந்து குஜராத் தேர்தலில் 12.9% வாக்குகளை பெற்று 5 இடங்களை வென்ற ஆம் ஆத்மி, தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றது. இப்போது அதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. 

தேசிய கட்சியாக ஒரு கட்சியை அறிவிக்க தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல் வாக்கு வங்கி வெற்றி நிலவரம் அடிப்படையில் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் அடிப்படையில் மூன்று மாநிலங்களில் இரண்டு சதவீத மக்களவைத் தொகுதிகளை அதாவது 11 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும் சட்டமன்றத் தேர்தல் அடிப்படையில் பார்க்கையில் ஒரு கட்சி நான்கு மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.  நான்கு மாநிலங்களிலும் ஆறு சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். தேர்தலில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். அந்த வகையில் டெல்லி பஞ்சாப் கோவாவை அடுத்து குஜராத்தில் தடம் பதித்த ஆம் ஆத்மி தேசிய கட்சிக்கான தகுதியை பெற்றது 

இப்போது தேர்தல் ஆணையம் தேசிய கட்சியாக அங்கீகரித்திருக்கும் கெஜ்ரிவால் கட்சிக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும். 

  • இந்தியா முழுவதும் துடைப்பம் சின்னம் பெறலாம்.
  • தேர்தல்களில் 40 நட்சத்திர பேச்சாளர்களைக் கொண்டிருக்கலாம்.
  • இவர்களது பயண செலவு வேட்பாளர் கணக்கில் கணக்கிடப்படாது.
  • கட்சி தலைமையகத்தைக் கட்ட அரசாங்க நிலத்தை பெறவும் தகுதி பெறுகிறது.
  • அங்கீகரிக்கப்பட்ட மாநிலம் மற்றும் தேசிய கட்சிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஒரே ஒரு முன்மொழிபவர் மட்டும் போதுமானது.
  • பொது தேர்தல்களில் ஆகாஷ்வாணி மற்றும் தூர்தர்ஷனில் பிரச்சாரம் செய்யவும் நேரம் ஒதுக்கப்படும்.
  • இது போன்ற பிற சலுகைகளும் ஆம் ஆத்மிக்கு கிடைக்கும்.

மம்தா பானர்ஜியின், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தனது தேசிய அங்கீகாரத்தை இழந்துள்ளது. அதேபோல் ஆந்திராவில் மாநில கட்சி அங்கீகாரத்தை இழந்துள்ளது.

 தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்,  சரத்பவாரின்  தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தேசிய கட்சி அங்கீகாரத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தது.

திரிணாமுல்  காங்கிரஸ் மேற்குவங்கம் திரிபுராவில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1989 முதல் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  மேற்கு வங்கம் ஒடிசாவில் மாநில கட்சி அந்தஸ்தை இழந்ததாகவும் கேரளா மணிப்பூர் தமிழகத்தில் மட்டும் அக்கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Source: https://www.facebook.com/ThanthiTV/videos/1987824144912498/?extid=WA-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&mibextid=2Rb1fB

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »